2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யூகலிப்டஸ் மரம் விழுந்ததில் வீடு சேதம்

Editorial   / 2025 ஜனவரி 19 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டத்தின் கீழ் பிரிவில் தற்காலிகமாக கட்டப்பட்ட வீட்டின் மீது யூகலிப்டஸ் மரம் விழுந்ததில், வீட்டில் இருந்த ஒரு பெண் காயமின்றி தப்பியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (19)  காலை 11 மணியளவில்  வீட்டின் மீது மரம் விழுந்ததாகவும், மரம் விழுந்ததில் வீடு முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காய்ந்து இருந்த மரத்திற்கு, விறகு பெறும் நோக்கில், ஒரு குழுவினர் தீ வைத்ததாகவும், தீ விபத்து காரணமாக மரம் அடிவாரத்தில் முறிந்து விழுந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .