2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் மரணம்

Editorial   / 2024 ஜனவரி 04 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்

மாத்தளையில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 18 வயதான மாணவன் மரணமடைந்துள்ளார்.

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையில் தரம் 12 வணிக  பிரிவில் கற்றுவந்த  இவர், மோட்டார்  சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று திரும்பும் வழியில்,  இன்னுமொரு சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானார்.

அவ்விபத்தில் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, மாத்தளை வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சைப்பிரிவில்  சிகிச்சைபெற்ற நிலையிலேயே மரணமடைந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .