2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

மூவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து

Janu   / 2024 ஜூலை 22 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக் ஓயா வைத்தியசாலையிலிருந்து நோர்வூட் ஸ்டோக்ஹோம் தோட்டத்திற்கு பயணித்த நோயாளர் காவு வண்டி ஒன்று (அம்புலன்ஸ்)  வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் ,ஹட்டன்- பகவந்தலாவ பிரதான வீதியின் நியூவெலிகம பிரதேசத்தில் திங்கட்கிழமை (22) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

டிக் ஓயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய ஸ்டோக்ஹோம் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று நோயாளர்களை ஏற்றிச் சென்ற போதே இவ்வாறு வீதியில் சறுக்கி சென்று விபத்துக்குள்ளாகியது .

விபத்தின் போது வாகனத்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X