2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

மனோ கணேசனுக்கு எதிராக நாளை போராட்டம்

Freelancer   / 2024 ஜூலை 06 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி க்கு எதிராக மலையகத்தில் ஐந்து இடங்களில் ஞாயிற்று கிழமை காலை போராட்டங்கள் நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மனித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மூன்று மாவட்டங்களில் ஐந்து பிரதான நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில்  கொட்டக்கலை நகரில் விநாயகர் ஆலயத்திற்கு முன் காலை 10 மணிக்கும் மற்றும் பொகவந்தலாவை நகரில் மாலை 02 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி காவத்தை நகரத்தில் காலை 10 மணிக்கும், கேகாலை தெஹியோவிட்ட நகரில் காலை 10 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

ஊவா மாகாணத்தில் பதுளை நகரத்திலும்,  மனோகணேஷன் எம்.பிக்கு எதிரான இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

1. Kotagala - Vinayagar Kovil at 10:00am

2. Bogawanthalawa - Town at 02:00pm

3. Ratnapaura - Khawatha Town at 10:00am

4. Kegalla - Dehiowita,chinnakuriyana

5. Badulla - 

 *Hon.Minister Jeevan Thondaman's Media Unit* (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X