2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

மகனின் தாக்குதலில் தாய் மரணம்

Janu   / 2024 டிசெம்பர் 15 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகனின் தாக்குதலில் 82 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம்  இரத்தினபுரி, கொடகவெல,  பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை  (15) இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கபுமல் தெனிய பிரதேசத்தை சேர்ந்த பொடி நோனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக  50 வயதுடைய மகன் கூரிய ஆயுதத்தால் தனது தாயின் தலையில் அடித்ததால் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X