Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக முன்னணியில் இதுவரை இருந்து வந்த நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மலைைக மக்கள் முன்னணியின் ஹட்டன் தலைமை காரியாலயத்தில் ஞாயிற்று கிழமை (17.09.2023) குறித்த நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு முன்னணியின் தலைவரும்,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவராக வேலுசாமி இராதாகிருஸ்ணன் தொடர்ந்தும் இருப்பார்.
இந்நிலையில் கட்சியின் கவுன்சில் உறுப்பினர்களாக ஆர்.ராஜாராம்,கண்மணி சிவனேசன்,ஆனந்தன்,தாளமுத்து தா.சுதாகரன்,க.சிவஞானம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை முன்னணியின் செயலாளர் நாயகமாக பேராசிரியர் எஸ்விஜயசந்திரன்,நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் பிரதி தலைவராக முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமும்,தேசிய அமைப்பாளராக ந.பாலமுரளி, மற்றும் நிதிச்செயலாளராக பி.கிருஸ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியிலும் பதவி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் தலைவராக கலாநிதி வே.ராதாகிருஸ்ணன், பதில் செயலாளராக புஸ்பா விஸ்வநாதன்,நிதிச்செயலாளராக தாளமுத்து சுதாகரன்,அமைப்பு செயலாளராக எஸ். ஜெயக்குமார்,பிரதி பொதுச்செயலாளராக க.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய்,செயலாளராக கதிர்காமத்தம்பி சுரேன்,
இணைப்பாளராக கலைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளீர் அணி தலைவியாக சுவர்ணலதா இலங்கேஸ்வரன்,செயலாளராக கிருஸ்ணவேணி,பிரதி தலைவியாக கலா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு கட்சியிலிருந்து விலகியிருந்த பத்மநாதன் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இவ்வாறு புதிய உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு காலம் கட்சியில் காணப்பட்ட பிணக்குகள் தீர்க்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் மலையகத்தில் மலையக மக்கள் முன்னணி மக்களோடு மக்களாக இருந்ததை விட மேலும் ஒரு படி முன்னோக்கி செல்லும் எனவும் எந்நேரமும் மக்களுக்காக மலையக மக்கள் முன்னணியின் கதவு திறந்திருக்குமென முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்,
ஆ.ரமேஸ்,
மஸ்கெலியா நிருபர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago