2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

போதையில் கான்ஸ்டபிள் ; சார்ஜென்ட்டின் உதட்டில் காயம்

Janu   / 2024 டிசெம்பர் 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி பாடசாலையில் நடைபெற்று வரும்  உயர்தர பரீட்சைகளுக்கான  கடமைகளுக்கு  நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் வந்து பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை தாக்கிய சம்பவம்  திங்கட்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்குள்ளான  பொலிஸ் சார்ஜன்ட் , மேல் உதடு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X