2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

பேருந்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்து

Janu   / 2025 மார்ச் 30 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலுகங்கை பிரதேசத்தில் இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும்  கப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை இடம்பெற்றுள்ளது.

பன்வில பெத்தேகம வீதியில்,  பன்வில நோக்கிச் சென்று கொண்டிருந்த கப் ரக வாகனமும் பெத்தேகம நோக்கிச் சென்ற பேருந்தொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்ததாகவும் விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மெய்யன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X