Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாட்டி பருகவேண்டிய இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் மாத்திரைகளை பருகிய பேத்தி, மரணமடைந்த சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் வசிக்கும்15 வயதான பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கடந்த (25) ஆம் திகதி பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் பாட்டியின் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு மயக்கம் உற்ற நிலையில் அயலவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி (27) உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமியின் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து நானுஓயா பிரதேசத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் சிறுமியின் சடலம் (29) தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செ.திவாகரன், டி.சந்ரு,கௌசல்யா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
45 minute ago
3 hours ago