Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 மார்ச் 16 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
பல்வேறு போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு ஹட்டன் வழியாக சிவனொளிபாதமலைக்கு வந்த 11 பேரை கைது செய்த செய்த பொலிஸார். அவர்களை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் எம். பாருக், சந்தேக நபர்களை தனிப்பட்ட பிணையில் விடுவித்து மீண்டும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18)ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
சிவனொளிபாதமலைக்கு வரும்போது பல்வேறு போதைப்பொருட்களை எடுத்துச் செல்லும் நபர்களைக் கைது செய்வதற்காக நல்லத்தண்ணி பொலிஸார் இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.ஏ.பி.எஸ். வீரசேகர தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொறுப்பதிகாரி இ.ஏ.பி.எஸ். வீரசேகர தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago