2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பசறை – ஹிகுருகடுவ வீதி தற்காலிகமாக மூடல்

Janu   / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு அபாயம் காரணமாக பசறை – ஹிகுருகடுவ வீதியைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் கொடமுதுன பிரதேசத்தில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு குறித்த வீதியைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீளமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .