2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

தரமற்ற 3,000 தண்ணீர் போத்தல் சிக்கின

Editorial   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் காலாவதியான நிலையில் போலியான தகவல்களை பயன்படுத்தி குடிநீர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை மாவனெல்ல ஹென்மதகம பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் இருந்து நுகர்வோர் அதிகார சபை கைப்பற்றியுள்ளது.

விநியோகிப்பதற்கு தயாராக இருந்த 500 மில்லி தண்ணீர் போத்தல்கள்1,904, ஒரு லீட்டர்  தண்ணீர் போத்தல்கள் 484, ஒன்றரை லீட்டர் தண்ணீர் போத்தல்கள் 576 19 லீட்டர் தண்ணீர் போத்தல்கள் 34 கைப்பற்றப்பட்டுள்ளன.

தமக்கு இல்லாத தரநிலை அல்லது அனுசரணை இருப்பதாக பொய்யாக கூறுவது நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் தவறு எனவும், சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X