2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

டிக்கிரி மெனிகேவால் கடும் சிரமம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலைக்கும், வட்டகொட ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் மலையக ரயில் பாதையில் பயணிக்கும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடம்புரண்ட ரயிலை அகற்றும் பணிகள் இன்று இரவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மலையக ரயிலில் பயணித்த பயணிகளும் கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .