Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூன் 20 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து , சிகிச்சை பெற்று வந்த வேன் சாரதி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (19) இரவு உயிரிழந்ததாக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
32 வயதுடைய நிர்மலராஜன் பிரியதர்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
கடந்த 11 ம் திகதி கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் ஹட்டனில் இருந்து கினிகத்ஹேன சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து இடம்பெற்றது .
விபத்தில் காயமடைந்த வேன் சாரதி கினிகத்ஹேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago