2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

மற்றுமொரு வழக்கில் சாமரவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட,   புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,   ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு  பதுளை நீதிமன்ற நீதவான் நுஜித் டி சில்வா, திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.

 ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க, 2016ஆம் ஆண்டில் கடமையாற்றிய போது, பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக் குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X