2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

குயில்வத்தையில் குத்துக்கரணம் அடித்த கார்

Editorial   / 2025 மார்ச் 16 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகவேகமாக பயணித்த காரொன்று, வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம், சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.

 கண்டியில் இருந்து ஹட்டன் வரைக்கும் இந்த கார் பயணித்துள்ளது. ஹட்டன் குயில்வத்தை பகுதியிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட போது, காரில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை. எனினும், அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது.

திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.   

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X