2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இரண்டை திருடிய ஒருவர்

Janu   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை நகரில் நகைக்கடை ஒன்றில் மோதிரங்கள் இரண்டு , ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

பசறை நகரில் உள்ள நகைக் கடை ஒன்றின் உரிமையாளர் இறுதிச் சடங்கு வீடொன்றுக்கு சென்றபோது 81 வயதுடைய நகைக் கடை உதவியாளர் மாத்திரம் கடையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்ற ஒருவர் தான் மோதிரங்கள் இரண்டு கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் மோதிரங்கள் இரண்டினை காட்டுமாறு கூறியுள்ளார்.

அதனையடுத்து கடையில் இருந்த உதவியாளர் இரண்டு மோதிரங்களை காட்டி ஒரு மோதிரம் 68000 ரூபாய் எனவும் மற்றைய மோதிரம் 55000 ரூபாய் எனவும் கூறிய போது இரண்டு மோதிரங்களையும் கையில் எடுத்த சந்தேக நபர் பார்ப்பது போல் நடித்து கடதாசி ஒன்றினால் சுற்றிக் கொண்டு கடையை விட்டு சென்றுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரை கைது செய்யும் முகமாக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .