2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

அழகிப் போட்டியில் திலினி குமாரிக்கு முதலிடம்

Janu   / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் - 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி  கட்டுநாயக்க விமான நிலையத்தை, திங்கட்கிழமை (16)  வந்தடைந்தார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி 09/09 முதல் 09/16 வரை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற திலினி,   இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-365 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கண்டி, பிரிமத்தலாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 டி.கே.ஜி.கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .