2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

அம்பேவெல கால்நடை பண்ணை பரிசோதகர் மரணம்

Janu   / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டிப்பொல, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேவெல கால்நடை பண்ணையில் விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை  (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சிறிசமன்கம, அம்பேவெல பிரதேசத்தை சேர்ந்த  55 வயதுடைய பண்ணை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X