Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை கொழுந்துகள் திருடப்பட்டுள்ளதாக கூறி தலவாக்கலை தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளி ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை (30) மாலை தாக்கியுள்ளார் .
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரியும் , தோட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை (31) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
தாக்குதலுக்குள்ளான தொழிலாளி , இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் .
பி.கேதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago