Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 ஜனவரி 08 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்சில், சுமார் 300 கிலோ கிராம் இலீக்சை திருடிச்சென்று விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
விவசாய தோட்டத்தின் உரிமையாள செய்த முறைப்பாட்டை அடுத்து களவாடிய இலீக்சை நோர்வூட் நகரில் விற்பனை செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விநாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செ.தி.பெருமாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
35 minute ago
3 hours ago