2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

3 சிறுமிகள், சிறுவன் மாயம்

Editorial   / 2024 ஜூலை 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன்  லூசா தோட்டத்தைச் சேர்ந்த சிறுமிகள் முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), சிறுவன் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) ஆகியோரை காணவில்லை.

வீடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (14)   மாலை வெளியே சென்றவர்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை  என அவர்களின் பெற்றோர்களால் தலவாக்கலை பொலிஸில் நிலையத்தில்  திங்கட்கிழமை (15)  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

குறித்த சிறுவர் உட்பட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல்  வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0764612289, 0771546724 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பெற்றோர்கள்   கோரியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X