Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Piriyadharshini / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
Dr.நி.தர்ஷனோதயன்
MD (S) (Reading)
இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக பறிக்கப்படுகின்றது.
தேங்காய் என்பது பழமெனவும் கருதப்படுகின்றது. பழங்களில் நடுவேயுள்ள ‘எண்டோஸ் பெர்ம்’ என்ற பகுதியே பழம் பெரிதாகி சதைப் பற்றுடன் வளரக் காரணம். இந்த ‘எண்டோஸ் பெர்ம்’ தோங்காயில் திரவவடிவில் காணப்படுகின்றது.
இளந்தேங்காயிலிருந்து இளநீர் பெறப்படுவதால், இளந்தேங்காய் நீர் மருவி இளநீர் எனப் பெயர் பெற்றுள்ளது. இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை பானமாகும். வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க சிறந்த பானமாகும்.
இளநீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதைத் தாண்டி இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக்கூடியதுடன், கோடைக்காலம் வந்துவிட்டால், வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் தாகத்தைத் தணிக்க இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும் சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக்கூடிய பானம் இளநீர் மாத்திரமே.
மருத்துவ பயன்கள்:
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago