2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, சின்ன ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன், பெண்ணொருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (17) இடம்பெற்ற இந்த விபத்தில் கல்முனைக்குடி 9ஆம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியை அண்டி வசிக்கும் 63 வயதுடைய இராசாத்தம்பி முமுஹம்மத் பஸில் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர், மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, ஊறணியில் இருந்து திருப்பெரும்துறையை நோக்கிப் பயணித்த பக்கோ இயந்திரமும் மோட்டர்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும் அதில் பின்னால் அமர்ந்துதிருந்து பயணித்த பெண்ணும் படுகாயமடைந்துள்ளனர்.

படுக்காயமடைந்தவர்கள், மட்டக்களப்பு போதனவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த வயோதிபர்  சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டிருப்பதுடன், விபத்து பற்றிய விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X