2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம்

Princiya Dixci   / 2021 ஜூன் 09 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய பொண்ணுத்துறை கௌகிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

வயல் காவலில் ஈடுபட்டிருந்த போதே, யானைத் தாக்குதலுக்கு குடும்பஸ்தர் இலக்காகியுள்ளார்.

சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .