2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மூன்று உறுப்பினர்கள் புறக்கணித்தனர்

Princiya Dixci   / 2021 ஜூன் 03 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் 40ஆவது சபை அமர்வு, தவிசாளர் திருமதி சோபா ஜெயரன்ஜித் தலைமையில் இன்று (03) நடைபெற்றது.

இந்த சபை அமர்வை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான எஸ்.ஐ.எம்.இம்தியாஸ், ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எம்.பி.தையூப், ஆகிய மூன்று உறுப்பினர்களும் அமர்வை புறக்கணித்தனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பகுதியில் சுமார் 48 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்பதிகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு மாற்றம் அண்மையில் செய்யப்பட்டது.

இதனை மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தே, மேற்படி சபை புறக்கணிப்பை மேற்கொண்டதாக பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .