2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 7 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Freelancer   / 2024 ஜூன் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான் 

போயா தினத்தையொட்டி   ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 7 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியாச்சகர் என். பிரபாகரன் தெரிவித்தார் 

சிறு குற்றம், தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை நிகழ்வில் சிறைச்சாலை நலன்புரிச்சங்க அதிகாரிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 

சிறைச்சாலை அதிகாரிகளை வணங்கிய பின் நன்றி தெரிவித்து கைதிகள் சிறைச்சாலையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X