2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 3 பேர் கொரோனாவுக்கு மரணம்

Freelancer   / 2021 ஜூன் 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, இன்று (09) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

கொரோனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த, காங்கேயன் ஓடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், கோறளைப்பற்று மத்தியைச் சேர்ந்த இருவர் உட்பட, 3 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர். 

அதேவேளை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார  சேவைகள், கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான, மட்டக்களப்பில் 33 பேரும், களுவாஞ்சிகுடியில் 14 பேரும், வாழைச்சேனையில் 05 பேரும், காத்தான்குடியில் 20 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 21 பேரும், ஓட்டமாவடியில் 31 பேரும், செங்கலடியில் ஒருவரும், ஏறாவூரில் 27 பேரும், பட்டிருப்பில் 16 பேரும், வவுணதீவில் 03 பேரும், ஆரையம்பதியில் 03 பேரும், கிரான் 03 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 03 பேரும், சிறைச்சாலையில் 07 பேர் உட்பட 186 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்லுகின்றது. எனவே  பொதுமக்கள் பயணைத்தடையை மீறி வீட்டில் இருந்து தேவையின்றி வெளியே வரவேண்டாம். என அவர் வேண்டுகோள் விடுத்தள்ளார். மா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .