2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

’பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன்’

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

தனது உப தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உப தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட நான், சுமார் மூன்று வருடங்களாக என்னால் முடிந்த பணிகளை மக்களுக்கு செய்துள்ளேன்.

“கட்சிக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, இம்மாதம் இடம்பெறவுள்ள சபை அமர்வில் நான் இராஜினமா செய்யவுள்ளேன்.

“எனது இராஜினாமாவுக்குப் பின்னர் இடம்பெறவுள்ள வெற்றிடத்துக்கு எமது கட்சியில் மாஞ்சோலை பகுதியில் போட்டியிட்ட ஏ.எச்.நுபைல் என்பவர், பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்படவுள்ளார்” என்று யூ.எல்.அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X