2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பட்டிப்பளை பட்ஜெட் நிறைவேற்றம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 24 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
கே.எல்.ரி.யுதாஜித்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்), சபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நேற்று (23) நிறைவேற்றப்பட்டது. 

எவ்வித எதிர்ப்புகளுமின்றி, அனைத்து உறுப்பினர்களின் கட்சி பேதமின்றிய ஏகோபித்த ஆதரவுடன் இந்த நிதியறிக்கை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

16 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 07 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 01 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 01 உறுப்பினரும், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவரும் அங்கம் வகிக்கின்றமை குறிபப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .