2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நள்ளிரவில் விபத்து : ஒருவர் பலி

Freelancer   / 2023 ஜூன் 22 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடியவட்டை பகுதியில் புதன்கிழமை (21) நள்ளிரவு  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சின்னவத்தையில் உள்ள ஆலய உற்சவம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விபத்தில்  19வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் 23வயது  இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்துள்ளதாகவும் ஏனைய நபர் படுகாயமடைந்திருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பான  விசாரணைகளை  முன்னெடுத்து வருவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X