Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 05 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு, ஹோட்டல். கடை தீவைப்பு மற்றும் ஆடைத்தொழிற்சாலை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக நேற்று (04) மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினரால் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, இதுவரை 38 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
கடந்த மே மாதம் (10) ஆம் திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம் வீடு அவரது உறவினரின் வீடு ஹோட்டல் கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத் தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில், நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, 16 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட இதுவரை 38 பேரை கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட 28 பேர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன், ஏனைய 9 பேர் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணையில் நாளாந்தம் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
6 hours ago