2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

‘தலைவருக்கோ ஆபத்து; சகபாடிகள் மூவரும் உல்லாசம்’

Editorial   / 2021 ஜூலை 28 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

பேராபத்துக்குள் தலைவர் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், சகபாடிகள் மூவரும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, உல்லாசம் அனுபவித்து கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி முக்கியஸ்தரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.அப்துல் மனாப், எதிரிகளை விடவும் துரோகிகளின் செயலே தலைவரின் மனத்தை கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கும் என்றார்.

“இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு கெட்ட காலமாகவே இந்த காலம் உள்ளது.   தன்னுடன் நட்பு பாராட்டியவர்களும் தனக்கெதிராக செயற்படும் காலம் வருமென தலைவர் நினைத்திருக்கமாட்டார்” என்றும் கூறினார்.

 

கல்முனை காரியாலயத்தில் இன்று( 28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

  இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைவருக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றார்.

தலைவருக்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்து, ஒரு உரையைக்கூட அவர்களால் நிகழ்த்த முடியவில்லை.   கண்டனத்தை கூட வெளியிட முடியாமல் இருப்பது கவலையளிக்கிறது எனத் தெரிவித்த எம்.ஐ.எம்.அப்துல் மனாப், இப்படியான நிலை எங்களது எதிரிகளுக்கும் வரக் கூடாதென இறைவனை பிராத்திக்கிறேன் என்றார்.

“எதிரிகளையும் விட துரோகிகள் கொடுமையானவர்கள்” என்பதை அம்மூவரும் எங்களுக்கு இப்போது  காண்பித்துள்ளனர்.

“சட்டம் ஒழுங்கு செய்யவேண்டிய வேலையை செய்துகொண்டிருக்கும் நிலையில், அரசியல் ஆதாயம் தேடி வீதியில் கூப்பாடு போடும் மலையக மற்றும் தமிழ் அரசியல்வாதிகள், தங்களின் மனதில் இவ்வளவு காலமும் வைத்திருந்த கசடை இப்போது வெளியிறக்கியுள்ளனர்” என்றார்.

 ஒரு சகோதரனுக்கு அநீதி நடைபெறுவதை பார்த்துக்கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் மௌனம் காத்திருக்கும் இந்த வேளையில் இறைவனை நாங்கள் துணைக்கு அழைத்துள்ளோம் எனத் தெரிவித்த எம்.ஐ.எம்.அப்துல் மனாப், இந்த பிரச்சினைகளுக்கு பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழ்க்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். சதிகாரர்களுக்கெல்லாம்  இறைவன் இருக்கிறான் என்பதையும் இறைவன் நீதியானவன் என்பதையும் தூரோகிகளும், எதிரிகளும் விரைவில் அறிவார்கள் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .