2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்  

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உட்பட்ட புதிய காத்தான்குடியில்  உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு சீனிப்பாணியை  சுத்தமான தேன் என ஏமாற்றி விற்பனை செய்த நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை(20) சுகாதாரத் துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார்

குறித்த நபர் தப்பியோடிய போதிலும் அவரிடம் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட சீனிப்பாணிகளைக் கொண்ட  போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சீனிப்பாணிகளை கொண்ட போத்தல்கள் குறித்த இடத்திலேயே உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 

புதிய காத்தான்குடி அல் அக்சா பள்ளிவாயலுக்கு வருகின்ற உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி குறித்த நபர்  சீனி பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி ஒரு போத்தல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்திருக்கிறார்.

  உள்ளூர் சுற்றுலா பயணிகள் இருவருக்கு இரண்டு சீனிப்பாணி போத்தல்களை விற்பனை செய்த நிலையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்ட நபரை மடக்கிப்பிடித்த போது குறித்த இடத்திலிருந்து அவர் தப்பியோடி இருக்கிறார் இருந்தபோதிலும் சுகாதாரத் துறையினர் அவரிடம் இருந்த சீனிப்பாணி போத்தல்களை கைப்பற்றி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .