2025 மார்ச் 31, திங்கட்கிழமை

கிழக்கில் கைகலப்பு: மாணவன் காயம்

Freelancer   / 2025 மார்ச் 15 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

 

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில், வர்த்தகப் பிரிவு  இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில், மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 

காயமடைந்த மாணவன், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (14) காலையில் இடம்பெற்றுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த பல்கலைக்கழகத்தில் வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவரும் 4 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியது.

 

காயமடைந்த மாணவன், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து  விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.AN

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X