2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உழவு இயந்திரங்கள் 8 கைப்பற்றப்பட்டன

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைநாவல் பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 08 உழவு இயந்திரங்களை, நேற்று  (30) மாலை திருகோணமலை - சர்தாபுர விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி, மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி உழவு இயந்திரங்களின் சாரதிகளும் கைது செய்ய்ப்பட்டுள்ளனர் எனவும் மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கு குறிக்கப்பட்டுள்ள இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபடாமல், வேறோர் இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .