Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும், சேயும் மரணமடைந்த சம்பவம் ஓட்டமாவடி - பாலைநகர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகரைச் சேர்ந்த 30 வயதுடைய இளம் தாயொருவர் பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பெண்ணை பரிசோதனை செய்த வைத்தியர்கள், பெண்ணின் வயிற்றில் சிசு உயிரிழந்து காணப்பட்டதை அடுத்து, சத்திர சிகிச்சை மூலம் நேற்று முன்தினம் உயிரிழந்த சிசுவை வெளியே எடுத்துள்ளனர்.
அத்துடன், தாய் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (03) மரணமடைந்துள்ளார்.
பெண்ணின் ஜனாஸாவை வைத்தியசாலை நிர்வாகத்திடமிருந்து பொறுப்பேற்ற குடும்பத்தினர், பாலைநகர் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நேற்று நல்லடக்கம் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
49 minute ago
55 minute ago
2 hours ago