2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இரத்த வௌ்ளத்தில் எஜமானியின் சடலம்: மட்டக்களப்பில் பதற்றம்

Editorial   / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வீட்டிலிருந்த பெண் ஒருவரை கண்டம் துண்டமாக வெட்டியதை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

அவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்திலிருந்த தங்க ஆபரணங்கள், தோடுடன் காதை வெட்டியெடுத்து, அதனை சொப்பின் பையொன்றில் எடுத்துச் செல்ல முற்பட்ட வேலைக்காரி மற்றும் அவருடைய தந்தை ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவ்விருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது  இதனையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பார் வீதியைச்சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 சடலமாக மீட்கப்பட்ட ​பெண், அவருடைய கணவன், மகள் ஆகிய மூவர் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் சம்பவதினமான இன்று பகல் கடந்த காலத்தில் அங்கு வீட்டுவேலை பார்த்துவந்த பெண்,  தந்தையாருடன்  சென்று தனது கஸ்டத்தை தெரிவித்துள்ளார்.    

வீட்டின் உரிமையாளர் மதியபோசன உணவை முடித்துவிட்டு நித்திரை கொள்வதற்கு மேல்மாடிக்கு சென்றுள்ளார். அதேவேளை, மகளும் உணவை உண்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.

அதேநேரம் உயிரிழந்த அப்பெண், குறித்த வேலைக்காரி மற்றும் அவரின் தந்தையாரை உணவு உண்டுவிட்டு போகுமாறு அமர்த்தியுள்ளார்.

எனினும், வீட்டு எஜமானியை கத்தியால், கழுத்து மற்றும் கைகளை துண்டாகவெட்டியுள்ளார். இதனையடுத்து அப்பெண் உயிரிழந்துவிட்டார். அவரிடமிருந்த நகைகள் அபகரித்துக்கொண்டு, ஓட்டோவொன்றில் தப்பியோட முயற்சித்த போதே, பொதுமக்களால் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்ட பெண் திருமணம் முடித்துள்ளதாகவும் இவர்கள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .