2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

Princiya Dixci   / 2021 ஜூலை 07 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா. கிருஷ்ணா

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரால், இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு நீதி வேண்டி, இன்றைய தினம் அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், மட்டக்களப்பு – காந்திபூங்காவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு முயற்சித்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த பொலிஸார், தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்,து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகை தந்திருந்த பஸ் உட்பட உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .