2025 மார்ச் 31, திங்கட்கிழமை

ஆரையம்பதி சம்பவம் நால்வருக்கு விளக்கமறியல், இருவருக்கு நீதிமன்ற உத்தரவு

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது   வாள் வெட்டு தாக்குதல்  நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான்  உத்தரவிட்டார்.

ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த  போது அங்கு வாள்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு விளையாடிக் கொண்டிருந்த  சிலர் மீது  துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு 4 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை(24) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X