2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

அரச காணியை அபகரிக்க முயற்சி; நால்வர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 01 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியிலுள்ள அரச காணியை அத்துமீறி அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் இன்று (01) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பலர் தப்பியோடியுள்ளனர்.

இதன்போது, 5 மோட்டர் சைக்கிள்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சத்துருக்கொண்டான் பிரதேசத்திலுள்ள குறித்த அரச காணியை குழுவொன்று, அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதாக மாவட்டச் செயலாளருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்தே, அப்பகுதியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார் சுற்றிவளைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .