2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அங்குரார்ப்பண பொதுக் கூட்டம்

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், ஜவ்பர்கான்

கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீட பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக விசேட அங்குரார்ப்பண பொதுக் கூட்டம், எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 04 மணியளவில் இணையவழி (online - நிகழ்நிலை) மூலம் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம்  புதிய நிர்வாக சபை தெரிவு, எதிர்கால நிகழ்வுகள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதால் கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீட பழைய மாணவர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாது பங்குபெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விவசாய பீட பழைய மாணவர்கள  அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்குவதோடு, தங்களது பதிவை உறுதிப்படுத்த 071 - 8080 118 (கலாநிதி எம்.சுகிர்தரன்) எனும் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு குறும்செய்தி அனுப்பிவைக்குமாறு, விவசாய பீட  பழைய மாணவர் சங்க ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .