2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

150 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டது

Mayu   / 2024 ஜூன் 09 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி 

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத கசிப்பு எனப்படும் வடிசாராயம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இந் நிலையில்  ஞாயிற்றுக்கிழமை (09) வவுணதீவு பொலிஸ்  நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட  நடவடிக்கையில் அப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சேனை ஆற்றை அண்டிய காட்டுப் பகுதியில் மிகவும் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரேத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இதன் போது சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்நடவடிக்கையில்,  5  பரல் கோடா மற்றும் காடி போன்ற  பதார்த்தங்களுடன், 150 போத்தல் கசிப்பு, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் சில உபகரணங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பரல்கள் உள்ளிட்ட பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக திருவாக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .