2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை

வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 10 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.

விலகல் முறையிலான இத்தொடரில், பிளைமூத் அர்கைலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.

அர்கைல் சார்பாகப் பெறப்பட்ட கோலை றயான் ஹார்டி பெற்றிருந்தார்.

இதேவேளை அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் தொடரிலிருந்து வெளியேறியது. வில்லா சார்பாக ஜேக்கப் றம்சி, மோர்கன் றோஜர்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை மதியிஸ் டெல் பெற்றிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X