2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

ரிட்ஸ்பரி ரிலே கானிவெல்-2024 நிறைவடைந்தது

Editorial   / 2024 ஜூலை 12 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கையின் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மூன்று நாள் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ரிட்ஸ்பரி ரிலே கானிவெல் பதுளை, வின்சன்ட் டயஸ் மைதானத்தில்2024, ஜுலை 4ஆம் திகதி நிறைவடைந்தது.

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சம்மேளனம் (SLSAA) மற்றும் நிகழ்வின் ஏக அனுசரணையாளராக ரிட்ஸ்பரி ஆகியன இணைந்து இந்த பெருமைக்குரிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

நாடு முழுவதையும் சேர்ந்த 220 க்கும் அதிகமான பாடசாலைகளின் 4,000 க்கும் அதிகமான இளம் மெய்வல்லுநர்கள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், திறன்களை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஒப்பற்ற விடாமுயற்சி மற்றும் விளையாட்டுப் பண்புகளையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. மொத்தமாக 87 புள்ளிகளை பதிவு செய்திருந்தது. வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி இரண்டாமிடத்தையும், கொழும்பு சென் பெனடிக்ட் கல்லூரி மூன்றாமிடத்தையும் சுவீகரித்திருந்தன.

பெண்கள் பிரிவில், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை அணி சம்பியன் பட்டம் வென்றதுடன், 120 புள்ளிகளை பதிவு செய்திருந்தது. வலல ஏ ரத்நாயக்க சி சி, மெனிக்ஹின்ன இரண்டாமிடத்தையும், கம்பஹா ஹோலி குரூஸ் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

வெற்றியாளர்களை தெரிவு செய்வதற்கு மேலதிகமாக ரிட்ஸ்பரி ரிலே கானிவல் 2024 பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதாக அமைந்திருந்தது. நாட்டின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த இளம் மெய்வல்லுநர்களில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்கான களமாக அமைந்திருந்தது. தேசத்தின் விளையாட்டு எதிர்காலத்தை கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, ஆரோக்கியமான போட்டித்திறன் மற்றும் விளையாட்டுப் பண்புகளையும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .