2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ராணி வசமானது சுதந்திர கிண்ணம்

Editorial   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா -ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரிய மஸ்கெலியா –ப்ரௌன்ஸ்வீக் தோட்டத்தில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் ராணி தோட்டப் பிரிவு வெற்றிப்​பெற்றது.

குறித்த போட்டியில்  ப்ரௌன்ஸ்வீக் தோட்டத்தின்  ஏழு பிரிவுகளில் உள்ள 14 அணிகள்  இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடின .

 அணிக்கு 7 ​பேர் கொண்ட 3 ஓவர் போட்டியாக நடத்தப்பட்ட இப்போட்டியில் முதலாவது இடத்தைப் ராணி தோட்டப் பிரிவு பெற்று, சுதந்திர தின கேடயத்தைத்  தட்டிக் கொண்டது.

இரண்டாவது இடத்தை மோட்டிங்ஹேம் பிரிவும்  மூன்றாவது இடத்தை கெஸ்கிபன் பிரிவும் தட்டிக் கொண்டன.

தோட்ட நிர்வாகம் மற்றும் பெயாடிரேட் நிறுவனம் ஆகிய இப்போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .