2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கோலியுடன் இணைந்து விடைபெற்ற றோஹித்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 01 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து விராட் கோலியுடன் இணைந்து இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மாவும் ஓய்வு பெற்றுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 37 வயதான ஷர்மா, 159 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 100 பந்துகளில் 140.89 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 4,231 ஓட்டங்களைப் பெற்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் மற்றும் அதிக சதங்களாக ஐந்து சதங்களைப் பெற்றவராக ஓய்வு பெற்றுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரையும் வென்ற ஷர்மா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவாவேன் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .