2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

காரைதீவில் சிவானந்தா அணி வெற்றி

Editorial   / 2023 மே 07 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா

காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும் ASCO அமைப்பும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி - 2023 காரைதீவு  விபுலாநந்த  மைதானத்தில் சனிக்கிழமை (06) மாலை 4.30  மணியளவில் கழகத்தலைவர் யா.டிலக்சிகன்  தலமையில் இடம் பெற்றது.

காரைதீவு ௯டைப்பந்தாட்ட அணியினை எதிர்த்து மட்டக்களப்பு சிவானந்தா அணி மோதியது. இதில் காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகம் 45 புள்ளிகளையும், மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் 52 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் வெற்றியை தனதாக்கிக்கொண்டனர்.

விளையாட்டு உத்தியோகத்தர் ப.வசந்த் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அஸ்கோ செயலாளர் சி.நந்தகுமார் உதவி கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா இலங்கை கூடைப்பந்தாட்ட  சம்மேளனத்தின் பிரதிநிதியாக .டேனியல் ஆகியோர் உரையாற்றினர்.

இதில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன்  அணிகளுக்கு  கேடயமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதிகளாக எஸ்.ஜெகராஜன் (பிரதேச செயலாளர் காரைதீவு), ஏ. சுந்தரகுமார் (செயலாளர்,பிரதேச சனா காரைதீவு) ஆகியோர்கலந்து கொண்டதுடன்,

கௌரவ அதிதிகளாக சி.நந்தகுமார் (செயலாளர் ASCO), பி. புவனேந்திரராஜா (இணைப்பாளர் ASCO),  கே. யோகராஜா (தலைவர்,சிவானந்தா விளையாட்டுக்கழகம்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக வி.ரி. சகாதேவராஜா (உதவிக்கல்விப் பணிப்பாளர்), வி.இராஜேந்திரன் (உத்தரவு பெற்ற நில அளவையாளர்),   அஜித் குருப் (இலங்கை கூடைப்பந்தாட்ட அணியின் சிரேஷ்ட பயிற்சிவிப்பாளர்) வி.. பாஸ்கரன் (விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக வை.கோபிகாந்த் (தலைவர், ப.நோ.கூ. சங்கம்,காரைதீவு), எஸ்.நேசராஜா தலைவர் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம்) எஸ். அருட்சிவம் (தலைவர்,றிமைன்டர் வினளயாட்டுக்கழகம்) மற்றும் இலங்கை கூடைப்பந்தாட்ட  சம்மேளனத்தின் பிரதிநிதியாக .டேனியல் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .