2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

ஏ.சி மிலனை வென்ற நாப்போலி

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 31 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (31) அதிகாலை நடைபெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.

நாப்போலி சார்பாக மட்டியோ பொலிட்டானோ, றொமெலு லுக்காக்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகா ஜோக்கோவிச் பெற்றிருந்தார்.

இதேவேளை பியொரென்டினாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா தோற்றது. பியொரென்டினா சார்பாகப் பெறப்பட்ட கோலை மொய்ஸே கீன் பெற்றிருந்தார்.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 67 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் காணப்படுகின்றது. 64 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நாப்போலியும், 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 56 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொலொக்னாவும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X