Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 31 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான் வா.கிருஸ்ணா
கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களால் தீப்பந்தங்களை ஏந்தியவாறு வியாழக்கிழமை (30) மாலை தீப்பந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை ஆகியவற்றை குறிக்கும் வகையில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் வகையில் மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தீப்பந்த போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு அருகில் வியாழக்கிழமை (30) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் நீதி கோரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள்,மதத்தலைவர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டு படுகொலைசெய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு குரல்கொடுத்தனர்.
இதன்போது ”இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்”,”ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து”,”கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புக்கூறு”,”ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்காதே” போன்ற கோசங்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
40 minute ago